டென்னிஸ்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை (கிரீஸ்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) வென்றார். சோபியா கெனின் (அமெரிக்கா), சோரனா கிறிஸ்டி (ருமேனியா), கரோலினா முசோவா (செக்குடியரசு), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு