டென்னிஸ்

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா

பான்பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டிக்குள் நவோமி ஒசாகா நுழைந்தார்.

தினத்தந்தி

ஒசாகா,

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா இரட்டை வெற்றி பெற்றார். அவர் கால்இறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் யுலியா புதின்ட்செவாவையும் (கஜகஸ்தான்), அரைஇறுதியில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரைஇறுதியில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா-பாவ்லிசென்கோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையுடன் 470 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு