கோப்புப்படம்  
டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன்..!

இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச், பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஜோகோவிச், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டிமிட்ரோவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் 7-வது முறையாக அவர் மகுடம் சூடினார். அவருக்கு ரூ.8 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

மொத்தத்தில் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜோகோவிச் கைப்பற்றிய 40-வது பட்டம் இதுவாகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்