Image Courtesy: AFP / Andrey Rublev  
டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

 தோகா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) - அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்ஸ் டி மினாரும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது.

இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த செட்டில் 7-6 (10-8) என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT