டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

ஷென்ஜென்,

49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஊதா பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) நேற்று 7-5, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் மாற்று ஆட்டக்காரர் சோபியா கெனினை (அமெரிக்கா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 10 நிமிடங்கள் நீடித்தது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே வீராங்கனையான ஸ்விடோலினா அரைஇறுதியில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) இன்று சந்திக்கிறார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) போராடி சாய்த்தார். 2-வது வெற்றியை பெற்ற பிளிஸ்கோவா தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதி சுற்றில் அவர் நம்பர் ஒன் மங்கை ஆஷ்லி பார்டியுடன் (ஆஸ்திரேலியா) மோதுகிறார். விம்பிள்டன் சாம்பியனான ஹாலெப் ஒரு வெற்றி, 2 தோல்வியோடு நடையை கட்டினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்