டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய மணிகா பத்ரா

இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.

கோவா,

உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்கள் தகுதி சுற்று நடந்தது. பிரதான சுற்று நேற்று தொடங்கியது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.

முன்னதாக பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் மணிகா பத்ரா 11-4, 11-8, 11-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் டின்-டின்னை தோற்கடித்தார். பின்னர் பெண்கள் இரட்டையரில் அர்ச்சனாவுடனும், கலப்பு இரட்டையரில் ஜி.சத்யனுடனும் இணைந்து முதல் சுற்றில் வெற்றி கண்டு மணிகா பத்ரா கால்இறுதியை எட்டினார்.

அதே சமயம் இந்திய இளம் வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 2-11, 13-11, 8-11, 2-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹனா கோடாவிடம் பணிந்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை