டென்னிஸ்

உலக பெண்கள் டென்னிஸ்: பாலா படோசா அரைஇறுதிக்கு தகுதி

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மரியா சக்காரியை வீழ்த்தி பாலா படோசா அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

தினத்தந்தி

குவாடலஜரா,

டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது.

8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்டில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு