புதுச்சேரி

கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

காரைக்கால் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் கே.எஸ்.ஆர்.நகரில் வசிப்பவர் விஜயசங்கர் (வயது55). அவரது மனைவி சரோஜா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்துவிட்டார். இவரது மகன் தீபக் (30) திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மனைவி இறந்த நாள் முதல் விஜயசங்கர் மதுவுக்கு அடிமையானார். தீபக் அடிக்கடி சென்று தனது தந்தையை பார்த்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல், தீபக் தந்தையை காண சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி இறந்த சோகத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை