புதுச்சேரி

உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் சாக்கடை கால்வாய்

காரைக்கால் நகராட்சி எதிரே திறந்துள்ள சாக்கடை கால்வாயால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது,

தினத்தந்தி

கோட்டுச்சேரி

காரைக்கால் நகராட்சிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர அங்கு பணியாற்றும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களும் நகராட்சிக்கு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் நடைபாதையில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. சற்று கவனம் சிதறினாலும் சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. நகராட்சிக்கு வரும் ஊழியர்களும் இதனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். உயிர்ப்பலி ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அந்த சாக்கடை கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்