புதுச்சேரி

போலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை

காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 38). அவரது மனைவி கலைச்செல்வி (35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி சந்திரனும், அவரது மனைவியும் விசாரணைக்காக காலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். அப்போது போலீஸ் நிலையத்திலேயே கலைச்செல்வி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி தனது விசாரணையை தொடங்கினார். அவர் கலைச்செல்வியின் கணவர் சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் பணியில் இருந்த போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.போலீஸ் நிலையத்திற்கு கலைச்செல்வி போலீஸ் நிலையத்திற்கு எப்படி பெட்ரோல், தீப்பெட்டி கொண்டு வந்தார் என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். தொடர்ந்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்