மும்பை

தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் பிடிபட்டார்

தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தானே,

தாத்ராநகர் ஹவேலி தாமனில் நடந்த வீடு புகுந்து திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் மும்ராவை சேர்ந்த ஆயஸ் மன்சூரி (வயது35) என்பது என தெரியவந்தது. இவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்திய போது ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் தலைமறைவானது தெரியவந்தது. அவர் ரபலே பகுதியில் நடமாடி வருவதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஆயஸ் மன்சூரியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்