புதுச்சேரி

மருத்துவமனை பெண் ஊழியரின் ஸ்கூட்டர் திருட்டு

புதுவையில் மருத்துவமனை பெண் ஊழியரின் ஸ்கூட்டர் திருடப்பட்டது.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சுபா (வயது 39), தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்தார்.

மறுநாள் காலை பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ மர்மநபர் ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து தவளக்குப்பம் போலீசில் சுபா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடு போன ஸ்கூட்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து