புதுச்சேரி

வலம்புரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

எல்லைப்பிள்ளைச்சாவடி வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் உள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் இன்று காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 7 மணிக்கு மஹா பூர்ணாஹீதியும் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க புனித தீர்த்தக்குடங்கள் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தாகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் தேர்வீதி உலா நடந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்