மும்பை

பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தானே, 

பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கிராம மக்கள் எதிர்ப்பு

தானே மாவட்டம் பயந்தர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிமனை கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பயந்தரில் உள்ள ராய், முர்தா, மோர்பே கிராமங்களை சோந்த மக்கள் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் கூட்டம் நடைபெற்றது.

அரசு உத்தரவு வரவில்லை

கூட்டத்துக்கு பிறகு அசோக் பல்வந்த் என்பவா கூறியதாவது:- மெட்ரோ பணிமனை திட்டத்தால் ராய், முர்தா, மோர்பே கிராமங்கள் பாதிக்கப்படும். திட்டத்துக்காக வீடுகளை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்-மந்திரியை சந்தித்து பேசினோம். இதையடுத்து அரசு பயந்தரில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மெட்ரோ பணிமனையை மாற்ற முடிவு செய்தது. ஆனால் அதுதொடர்பாக இதுவரை அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...