புதுச்சேரி

கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 31 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான போட்டி தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, நேரம், தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு இணையதளங்களிலும், முன்னணி பத்திரிகைகளிலும் வெளியிடப்படும் என்று நில அளவைத்துறை சார்பு செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து