அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன் வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக் டர் சந்தீப்நந்தூரி கூறினார்
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன் வாடி பணியாளர் பணிக்கு விண்ணப் பிக்கலாம் என்று கலெக் டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அங்கன்வாடி பணியாளர்கள்

நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள 21 வட்டாரங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன் வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் வட்டார வாரியாக மொத்தம் 1,605 பணியிடங்களுக்கு இன சுழற்சி, முன்னுரிமை மற்றும் முற்றுரிமையற்றவர் அடிப் படையில் காலிப்பணியிடங் களுக்கு தகுதியான விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.

இந்த 1,605 காலிப்பணியிடங் களுக்கு வருகிற 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை நெல்லை கலெக்டர் அலு வலகத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரடி யாகவோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக் கலாம்.

தகுதிகள்

அங்கன்வாடி பணியாளர் களுக்கும், குறுஅங்கன்வாடி பணியாளர்களுக்கும் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். மலைவாசி மக்களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். கணவரை இழந்தவருக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத சலுகை வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். மலைவாசி மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் பஞ்சாயத்திலோ அல்லது 10 கிலோ மீட்டருக்குள் இருக்கவேண்டும். நகரசபை, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த வார்டு அல்லது அதற்கு அடுத்த வார்டில் வசிக்க வேண்டும். இந்த தகுதி உடையவர்கள் விண்ணப்பிலாம்.

அங்கன்வாடி உதவியாளர் களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். மலைவாசி மக்கள், கணவரை இழந்தவர், கைவிடப்பட்டவர்களுக்கு 20 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத சலுகை வழங்கப்படும். கல்வி தகுதி எழுதபடிக்க தெரிந்து இருக்கவேண்டும். அங்கன்வாடி மையத்தில் பஞ்சாயத்திலோ அல்லது 10 கிலோ மீட்டருக்குள் இருக்கவேண்டும். நகரசபை, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த வார்டு அல்லது அதற்கு அடுத்த வார்டில் வசிக்கவேண்டும். இந்த தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com