சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமனம்

புதுவை காவல்துறை தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமனம்
Published on

புதுச்சேரி

டெல்லியில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான அனிதாராய், புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், புதுவை காவல்துறை தலைமையகத்தின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யாவுக்கு, ஐ.ஆர்.பி.என். கமாண்டண்ட் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமை செயலர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com