

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 44 வயது ஆணுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே நேற்று மேலும் 13 பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம் 24 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.