ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு

ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு
Published on

தானே, 

பிவண்டி மண்டாய் பகுதியில் தானே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று  அதிகாலை 3.45 மணி அளவில் 2 பேர் உள்ளே நுழைந்தனர். எந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் முடியாமல் போனதால் 2 பேரும் கல்யாண்-பிவண்டி சாலையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் உள்ளே அதிகாலை 5 மணி அளவில் நுழைந்தனர். எந்திரத்தை சேதப்படுத்தி ஸ்குரு டிரைவரால் திறக்க முயன்றனர். இதிலும் முடியாமல் போனதால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை அடிக்க முயன்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். ஏந்திரங்களை உடைக்க முடியாமல் போனதால் லட்சக்கணக்கிலான பணம் கொள்ளை போகாமல் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com