ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதல்

ஆரணி அருகே ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதல்
Published on

ஆரணி

ஆரணி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 22), விந்தியா (23), சுவாதி (21) ஆகிய மூவரும் ஆரணியில் உள்ள ஜவுளி கடைகளில் வேலை செய்கின்றனர். நெசல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

நேற்று இவர்கள் 4 பேரும் ஆரணி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடைய ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சென்றபோது சேத்துப்பட்டு சாலையில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஐஸ்வர்யா, விந்தியா, சுவாதி, சீனிவாசன், ஸ்ரீதர் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com