

அரியாங்குப்பம்
அரியாங்குப்பத்தில் உள்ள சிவசுப்பிரமணிய கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு இன்று நடைபெற்றது.இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.