பூத்துக்குலுங்கும் காபி செடிகள்

கூடலூர் பகுதியில் கோடைமழை பெய்ததால் காபி செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பூத்துக்குலுங்கும் காபி செடிகள்
Published on

கூடலூர்

கூடலூர் பகுதியில் கோடைமழை பெய்ததால் காபி செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காபி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தேயிலைக்கு அடுத்தப்படியாக காபி விவசாயம் நடைபெற்று வருகிறது.

அரபிக்கா, ரோபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது. இவை ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அதன்பிறகு கோடை மழை பெய்தால், அடுத்தகட்ட விளைச்சலுக்கு தயாராகும்.

பூத்துக்குலுங்குகிறது

இந்த ஆண்டு கோடைமழை பெய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் காபி விளைச்சல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் கோடைமழையை எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைமழை பரவலாக பெய்தது. இதையொட்டிகூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காபி செடிகள் பூத்துக்குலுங்கி வருகிறது. இதன் காரணமாக காபி பூக்களின் மணம் எஸ்டேட் பகுதியில் வீசுகிறது.

மகிழ்ச்சி

கோடைமழை தாமதமாக பெய்தாலும் சரியான நேரத்தில் காபி செடிகள் பூத்து உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- இந்த ஆண்டு காபிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அறுவடை சீசன் முடிவடைந்தவுடன் கோடைமழை பெய்ய வேண்டும்.

ஆனால் பல வாரங்கள் மழை பெய்யாமல் இருந்தது. தற்போது தாமதமாக பெய்தாலும் காபி செடிகள் அடுத்தகட்ட விளைச்சலுக்காக பூத்து உள்ளது. இதனால் வரும் நாட்களில் விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com