காஞ்சீபுரம் மாவட்ட போலீசாருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையினருக்கு ஆயுத படை சமுதாய கூடத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட போலீசாருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
Published on

முகாமை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பூசி செலுத்தி கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி போலீசாருக்கு எடுத்துரைத்து முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஐமன் ஜமால் கலந்து கொண்டார். இந்த முகாமில் 100 போலீசார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com