பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
Published on

பொன்னேரி

பொன்னேரி அடுத்த திருஆயர்பாடியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 17-ம் தேதி சந்திப்பு பெருவிழா, 19-ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com