எருது விடும் விழா

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா
எருது விடும் விழா
Published on

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றது இதில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், வேலூர் மாவட்டம், உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கடும் வெயிலிலும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து எருது விடும் விழாவை கண்டுகளித்தனர்.

இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் ஓடிய காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட்டது.

காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினரை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை கண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com