ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதானி நிறுவனம்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அதானி நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதானி நிறுவனம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பெருநகரங்களான லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் உள்ளிட்டவற்றில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் அதானி வசம் உள்ளது. அதானி விமான நிறுவனங்கள் என்ற பெயரில் இந்த விமான நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அதானி விமான நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி குருகிராமை சேர்ந்த உள்நாட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனமான அயனோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்மூலம் அறிமுகமாகும் ஏ.ஐ. உரையாடல் செயலி விமான நிலைய சேவையை பயன்படுத்தும் பயனளார்களுக்கு உதவ இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com