துபாய்க்கு பறந்த இந்திய ஆப்பிள்கள்

கர்வாலி ஆப்பிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இதுவே முதல் முறையாகும்
துபாய்க்கு பறந்த இந்திய ஆப்பிள்கள்
Published on

இந்திய ஆப்பிள்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளான துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்டவற்றில் பெரும் தேவை உள்ளது. இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் விளையும் பிரபல கர்வாலி ஆப்பிள்கள் நேரடியாக துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கர்வாலி ஆப்பிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இதுவே முதல் முறையாகும். மத்திய வணிகத்துறை செயலாளர் சுனில் பார்த்வால், புவிசார் குறியீடு பெற்ற 1.2 டன் கர்வாலி ஆப்பிள்களுடன் துபாய்க்கு பறப்பதற்கு தயாரான விமானத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com