4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு
Published on

மும்பை,

இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று உச்சமடைந்து காணப்பட்டன. இதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து (0.49 சதவீதம்) 84,363.37 புள்ளிகளாக இருந்தது. இன்றைய நாளில் அது 704.37 புள்ளிகள் வரை உச்சமடைந்து 84,656.56 புள்ளிகளாகவும் இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 133.30 புள்ளிகள் (0.525 சதவீதம்) உயர்ந்து 25,843.15 புள்ளிகளாக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கு இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, இந்திய பாரத வங்கி, டாடா கன்சல்டன்சி, டைட்டன் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. ஆசிய பங்கு சந்தைகளிலும் நேர்மறையான போக்கு காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகள் லாபத்துடன் காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com