கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (20.01.2026 - செவ்வாய்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 353 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 232 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 487 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 404 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 318 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

347 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 307 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 788 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 896 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com