ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட ஐந்து நடராஜர் சிலை

பல்லவ மரபின் தோற்றத்துக்குக் காரணமானவனாக கருதப்படுபவன் சிம்மவர்மன் என்னும் மன்னன். இவன் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்தான்.
ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட ஐந்து நடராஜர் சிலை
Published on

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கையை இழந்த சிற்பிக்கு, மன்னன் ராமபாண்டியன் மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலையைத் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்த செப்புச் சிலை இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச் சிலைகளைக் காட்டிலும் அழகுற காட்சியளித்தது.

அந்தச் சிலையில் அழகில் மயங்கிய சிற்பி, சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு, அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோவிலில் நிறுவப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் இருக்கிறது கருவேலங்குளம் திருத்தலம்.

தொகுப்பு: தேனி. மு.சுப்பிரமணி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com