

விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 43). இவர் இந்நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அசோக், வீரபாண்டி ஆகிய 2 பேரும் மது குடித்து விட்டு பணம் தர மறுத்ததோடு மாரிச்செல்வதுடன் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.700-ஐ பறித்து சென்றனர். இதுபற்றி மாரிச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார், அசோக் மற்றும் வீரபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.