சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த வாரம் மூடிகெரேவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஹர்ஷா முடிவு செய்து இருந்தார். இ்ந்தநிலையில், நேற்றுமுன்தினம்  நல்லூர் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க ஹர்ஷா  சென்றார். அப்போது அங்கு அவரது நண்பர்கள் 2 பேர் வந்தனர். பின்னர் தனது நண்பர்கள் 3 பேருடன் அவர் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

அவர்கள் குளத்தில் ஆனந்த குளியல் போட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஹர்ஷா ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். அதனை பார்த்த நண்பர்கள் ஹர்ஷாவை காப்பாற்ற சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர்கள் சிக்கமகளூரு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

பிணமாக மீட்டனர்

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சிக்கமகளூரு புறநகர் போலீசாரிடம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் குதித்து ஹர்ஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 3 மணிநேரம் போராடி அவரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

பின்னர் ஹர்ஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com