சுருதிஹாசனால் 2 படங்கள் தாமதம்

பிரபாசின் சலார் படப்பிடிப்பில் சுருதிஹாசன்தான் பிசியாக இருப்பதால் சுருதிஹாசனின் கால்சீட்டுக்காக பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களின் படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது
சுருதிஹாசனால் 2 படங்கள் தாமதம்
Published on

சுருதிஹாசன் தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருடனும் பிரபாசுடன் சலார் ஆகிய 3 படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பாலகிருஷ்ணா படத்துக்கு தற்காலிகமாக 'என் பி கே 107' என்று பெயர் வைத்துள்ளனர். சிரஞ்சீவி படம் ரவீந்த்ரா என்கிற பாபி இயக்கத்தில் வால்தேர் வீரய்யா என்ற பெயரில் தயாராகிறது. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களை அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டு படங்களிலுமே சுருதிஹாசன்தான் கதாநாயகி. இந்த இரு படங்களின் இடையே எந்த படத்தை முதலில் ரீலீஸ் செய்வது என்பதில் போட்டி உள்ளது. ரிலீஸ் செய்வது ஒருபுறம் இருக்க இந்த படங்களின் படப்பிடிப்பு சுருதிஹாசனால் தாமதமாகி உள்ளது என்கின்றனர். இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் தேதிகளை ஒதுக்க முடியாமல் சுருதிஹாசன் திணறுவதாக கூறப்படுகிறது. பிரபாசின் சலார் படத்திலும் சுருதிஹாசன்தான் கதாநாயகி. தற்போது அவர் சலார் படத்தின் படப்பிடிப்பில்தான் பிசியாக இருக்கிறார். எனவே சுருதிஹாசனின் கால்சீட்டுக்காக பாலகிருஷ்ணாவும், சிரஞ்சீவியும் தவம் கிடப்பதாக கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com