

முத்துராமன் நடித்த வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் நடித்த வேடத்தில் யோகி பாபு, ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் கருணாகரன், லட்சுமி நடித்த வேடத்தில் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஊர்வசி, மனோபாலா, தலைவாசல்
விஜய் ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள். படத்தை தயாரித்து டைரக்டு செய்பவர், கண்ணன்.
இவர் கூறுகையில், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறோம். 45 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.