

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா அஜித்தின் தாயார் மோகினி(84) இன்று காலை சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”அன்புச் சகோதரர் அஜித் குமாரின் அன்னையார் மறைவுற்றசெய்தி அதிர்ச்சி தருகிறது. அம்மையாருக்கு என் அஞ்சலி. இந்த இழப்பில் துயரமடையும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். நல்ல கலைஞனைப் பெற்றுக்கொடுத்த பெருமாட்டியின் ஆருயிர் அமைதியுறுக” என தெரிவித்துள்ளார்.