டுவிட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்..!

நடிகர் விக்ரம் தற்போது டுவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார்.
டுவிட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்..!
Published on

சென்னை,

நடிகர் விக்ரம் கடந்த 2016-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். டுவிட்டரில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ள அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய டுவிட்டர் நுழைவை அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், தன்னுடைய அடுத்த படமான 'சியான் 61' படம் குறித்து கூறிய விக்ரம், பல ஆண்டுகளுக்குப் பிறகு டுவிட்டரில் கணக்கு தொடங்க காரணம் என்ன என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய அன்பை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கணித மேதையாக பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற 31-ந்தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம் 'ஆதித்த கரிகாலன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 16-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்துக்கு 'சியான் 61' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் கேஜிஎப்-ல் நடந்த சில சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com