

திருவள்ளூர்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்தப்பின் நடிகை ஐஸ்வர்யா ராஜேசிடம் அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.