சினிமா உலகில் அதிர்ச்சி: போதைப்பொருள் வழக்கில் நடிகை கைது

போதைப்பொருள் வழக்கில் சினிமா நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா உலகில் அதிர்ச்சி: போதைப்பொருள் வழக்கில் நடிகை கைது
Published on

சென்னை,

சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.

இவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைன் கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Also Read
ஆண்ட்ரியாவின் “கா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா உலகில் அதிர்ச்சி: போதைப்பொருள் வழக்கில் நடிகை கைது

மதுபோதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com