‘‘நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்’’

நடிகை ஸ்ரீரெட்டி முகநூல் பக்கத்தில் மீண்டும் புதிய புகாரை பதிவிட்டுள்ளார்.
‘‘நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்’’
Published on

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. நடிகர் லாரன்சும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஒரு தமிழ் நடிகர் மீது சமீபத்தில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் ஆறவில்லை. படவாய்ப்புக்காக ஒரு பிணத்தை போலவே பயன்பட்டேன். இப்போது ஒரு தமிழ் கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஒரு பெண் பித்தர் என்று கூறினார்.

இப்போது மீண்டும் முகநூல் பக்கத்தில் புதிய புகாரை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தகவல்களை வெளியிடுவதில் சிரி எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீயும் அப்படித்தான். சினிமா துறையில் இருக்கும் பெரிய ஆட்களின் காதல் சமாசாரங்கள் எல்லாமே எனக்கு தெரியும். வித்தியாசமான பல பெண்களிடம் இருந்து அனைத்து தகவல்களையும் திரட்டிக்கொண்டு இருக்கிறேன். இது திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் சிக்கலில் இருக்கும் பல பெண்களை காப்பாற்றவும் முடியும்.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com