பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல - எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல - எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு
Published on

மும்பை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்தின் காதலி ரியாவிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரியா உள்ளிட்ட 8 பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ-க்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

சுஷாந்தின் உடலை மும்பை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்தது. அதில் இருந்த சில குறைபாடுகளை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. என்றாலும் சுஷாந்த் மரணத்தில் விஷப் பொருளுக்கான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது.

எய்ம்ஸ் அறிக்கை இறுதியானது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சிபிஐ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மும்பை காவல் துறை தெரிவித்தபடி சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக கருதி சிபிஐ தனது விசாரணையை தொடர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com