டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது - எலான் மஸ்கிடம் உதவி கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது - எலான் மஸ்கிடம் உதவி கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிடம் உதவி கேட்டுள்ளார். கடந்த மார்ச் 24-ந்தேதி அன்று ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தித் தொடர்பாளரும், விளம்பரதாரருமான யுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை ரசிகர்களும் பின்தொடர்பவர்களும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்படும் எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "அன்புள்ள எலான் மஸ்க், நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் விளம்பரதாரர். டுவிட்டரில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்து. சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com