புதிய பட கதையுடன் திருத்தணி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்


புதிய பட கதையுடன் திருத்தணி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 March 2025 10:35 AM IST (Updated: 15 Nov 2025 10:57 AM IST)
t-max-icont-min-icon

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை திருத்தணி முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர்,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இவர் 'வை ராஜா வை மற்றும் லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கினார். அதிலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இதற்கிடையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்தார்.

1 More update

Next Story