

சென்னை,
நடிகர் அல்லு அர்ஜுன் கோர்ட் படத்தின் குழுவினரை சந்தித்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அல்லு அர்ஜுன் ஏற்கனவே கோர்ட் படத்தைப் பார்த்திருந்தாலும், பரபரப்பான படப்பிடிப்பு காரணமாக அவரால் குழுவினரை சந்திக்க முடியவில்லை.
இப்போது அவருக்கு சிறிது நேரம் கிடைத்ததால், அவர் குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.