'அமரன்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழுவினருக்கு விருந்தளித்த சிவகார்த்திகேயன்

இன்று அமரன் படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விருந்தளித்தார்
'அமரன்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழுவினருக்கு விருந்தளித்த சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு 'அமரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் 'அமரன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

அமரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று அமரன் படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் விருந்தளித்தார். படத்தில் பணிப்புரிந்த அனைவரும் இதல் கலந்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com