

சென்னை,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “டிசி” திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இப்படம் கவனம் பெற்றுள்ளது.
இதனை பார்த்த சிவகார்த்திகேயன், “டிசி ஒரு அதிரடியான மிக சிறந்த திரை அனுபவமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த வலுவான ஆக்சன் படத்தை வழங்கியுள்ளனர்” என்று பாராட்டியுள்ளார்.
மேலும், அனிருத்தை குறிப்பிட்டு, “நீங்கள் உங்களுக்கென ஒரு தனித்துவமான அரியணையை உருவாக்கி, அதில் கம்பீரமாக ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். நீங்கள் உண்மையிலேயே ஈடு இணையற்றவர்” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.