கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி நாயர்

மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அஞ்சலி நாயர் வெளியிட்டு இருக்கிறார்.
கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி நாயர்
Published on

தமிழில் 'நெடுநல்வாடை' படத்தில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இதில் குடும்ப பாங்காக நடித்து இருந்தார். 'டாணாக்காரன்' படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வந்தார். இதிலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அஞ்சலி நாயர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. இதன் மூலம் அடுத்த படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களாக இல்லாமல் கவர்ச்சியாகவும் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது புதிய படமொன்றில் நடிக்க அஞ்சலி நாயர் ஒப்பந்தமாகி உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com