'கருத்து சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்' - கங்கனா ரனாவத்

சி.ஏ.ஏ. குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோவை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Image Courtesy : @KanganaTeam
Image Courtesy : @KanganaTeam
Published on

மும்பை,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கருத்து சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதோடு, சி.ஏ.ஏ. குறித்து கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்றையும் கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com