மாயாஜாலத்தை கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் “சைக்கிள் கேப்”

இன்றைய தலைமுறையைக் கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாகக் கொண்டு வரும் திரைப்படமே ‘சைக்கிள் கேப்’.
மாயாஜாலத்தை கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் “சைக்கிள் கேப்”
Published on

அழியாத கோலங்கள்2, ட்ரீம் கேர்ள் படங்களை இயக்கிய எம்.ஆர்.பாரதியின் அடுத்த படம் ‘சைக்கிள் கேப்’. நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிக்க, காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் கதையாக வருகிறது.

இன்றைய தலைமுறையைக் கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாகக் கொண்டு வரும் திரைப்படமே ‘சைக்கிள் கேப்’.

படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “சிந்து பைரவி, முகவரி, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் காதலும் இருந்தது, இசையும் இருந்தது. இந்த படமும் அந்த மாதிரி ஜானர். வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. அதை இதில் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம். உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்த திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும். புதுமுகம் சதீஷ் பத்மநாபன் இசையமைக்கிறார். நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கவுஷிக் ஸ்ரீதரன் பாடியிருக்கிறார்” என்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com