“டெலிவரி பாய்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

திண்டுக்கல் லியோனி மகன் நாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
Related Tags :
Next Story






