இயக்குநர் பாரி இளவழகன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் பாரி இளவழகன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது. இதில் குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, லவ்வர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

தனது 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டு அன்று மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், ‘ஜமா' பட புகழ் பாரி இளவழகன் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற கோடைவிடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com